தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா; 53 பேர் சாவு
1 min readCorona for 28,515 people in Tamil Nadu today; 53 deaths
27.1.2022
தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 53 பேர் உயிரிழந்துள்ளனர். 28,620 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 29,976 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 28,515 ஆக சற்று குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,46,798 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 28,512 பேர், வங்கதேசம் 2, ஒடிசா 1, நாடு மற்றும் மாநிலத்திற்கு சென்று திரும்பியவர்கள் என மொத்தம் 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,52,751 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 16,089 பேர் ஆண்கள், 12,426 பேர் பெண்கள். தமிழகத்தில் 28,620 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,01,805 ஆக உயர்ந்துள்ளது.
53 பேர் சாவு
தமிழகத்தில் 53 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,412 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,973 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 27 ம் தேதி) 5,591ஆக சற்று குறைந்துள்ளது.
கோவையில் 3629 பேருக்கும்,செங்கல்பட்டில் 1696 பேருக்கும், ஈரோட்டில் 1314 பேருக்கும், சேலத்தில் 1413 பேருக்கம், திருப்பூரில் 1877 பேருக்கும், நெல்லையில் 416 பேருக்கும், தென்காசியில் 371 பேருக்கும், தூத்துக்குடியில் 330 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.