April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 16,096 பேருக்கு கொரோனா; 35 பேர் சாவு

1 min read

Corona for 16,096 people in Tamil Nadu today; 35 deaths

1.2.2022

தமிழகத்தில் இன்று 16,096 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். 25,592 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 19,280 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 16,096 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,30,651 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 16,093 பேர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட், கத்தார் மற்றும் இலங்கை நாடுகளுக்கு சென்று திரும்பிய தலா ஒருவரையும் சேர்த்து 16,096 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,61,316 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 9,568 பேர் ஆண்கள், 6,528 பேர் பெண்கள். இன்று 25,592 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,35,118 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 35 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இவர்களையும் சேர்த்து, கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,599 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,897 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி1 ம் தேதி) 2,348 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 1897 பேருக்கும், செங்கல்பட்டில் 1308 பேருக்கும், திருப்பூரில் 1297 பேருக்கும், ஈரோட்டில் 924 பேருக்கும், நெல்லையில் 336 பேருக்கும், தென்காசியில் 83 பேருக்கும், தூத்துக்குடியில் 156 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.