May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 1,49,394 பேருக்கு கொரோனா; 1,072 பேர் சாவு

1 min read

Corona for 1,49,394 newcomers in India; 1,072 deaths

4.2.2022
இந்தியாவில் புதிதாக 1,49,394 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் ஒரு நாளில் 1,072 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,19,52,712 ஆனது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில், 2,46,674 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,00,17,088 ஆனது. தற்போது 14,35,569 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

1072 பேர் சாவு

கொரோனா காரணமாக ஒருநாளில் 1,072 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,00,055 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 168.47 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 55,58,760 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.