May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

இலங்கையில் தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகள் ஏலம்

1 min read

105 keyboard boats of Tamil Nadu fishermen auctioned in Sri Lanka

7.2.2022

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழ்நாடு மீனவர்களின் 105 விசைப்படகுகளை ஏலம் விடும் பணி தொடங்கியது.

படகுகள்

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கியது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டும் அவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளன.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 105 படகுகள் நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இதற்கு தமிழக மீனவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த எதிர்பையும் மீறி தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு இன்று தொடங்கியது. அரசுடைமையாக்கப்பட்ட 105 படகுகளில் 65 படகுகளை காரைநகரில் ஏலம் விடும் பணி நடைபெற்று வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.