தமிழகத்தில் இன்று 5,104 பேருக்கு கொரோனா; 13 பேர் சாவு
1 min readCorona for 5,104 people in Tamil Nadu today; 13 deaths
7.1.2022
தமிழகத்தில் இன்று 5,104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர். 21,027 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 5,104 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கொரோனா
தமிழகத்தில் 1,18,782 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 5,098 பேரும் ஐக்கிய அரபு எமிரேட், இலங்கை மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பிய தலா 2 பேரையும் சேர்த்து 5,104 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,15,986 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 3,022 பேர் ஆண்கள், 2,082 பேர் பெண்கள். 21,027 பேர் கொரோனால் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,72,322 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 13 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,772 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 972 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 7 ம் தேதி) 839 ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் 58 பேருககும், தென்காசியில் 16 பேருக்கும், தூத்துக்குடியில் 35 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.