திமுக.,வின் செயற்கையான வெற்றி; பன்னீர்செல்வம் விமர்சனம்
1 min readDMK’s artificial success; Panneerselvam Review
22.2.2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி செயற்கையானது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம்
கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (பிப்.,22) நடைபெற்றது. இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் பெருவாரியான இடங்களில் திமுக வென்று, அமோக வெற்றிப் பெற்றுள்ளது. அதிமுக எதிர்பார்த்ததை விட குறைவான இடங்களிலேயே வெற்றிப் பெற்றது.
திமுக.,வின் வெற்றி தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
செயற்கையான வெற்றி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக செயற்கையான வெற்றியை பெற்றிருக்கிறது. தேர்தல் நியாயமாக நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும். நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல. மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியிலான வாய்ப்பு விரைவில் அமையும். மக்களின் விருப்பப்படி அதிமுக மீண்டும் வெற்றி பெறும். இது நிச்சயம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.