April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 439 பேருக்கு கொரோனா ; ஒருவர் சாவு

1 min read

Corona for 439 people in Tamil Nadu today; One is death

27.2.2022
தமிழகத்தில் இன்று 439 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 1,209 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (பிப்ரவரி 26 ம் தேதி) 480பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 27ம் தேதி) பாதிப்பு 439 ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

439 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 60,707 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,49,007 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 258 பேர் ஆண்கள், 181 பேர் பெண்கள். இன்று மட்டுமு் 1,209 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,04,611 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாகப்பட்டினத்தில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், தனியார் மருத்துவமனையில் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,003 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் தனியார் மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 126 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 27 ம் தேதி) 119 ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் 4 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 3 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.