June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

வெயிலில் மயங்கிவிழுந்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram Fainted In The Sun / Comedy Story by Thabasukumar

7.4.2022
கண்ணாயிரம் சிலம்பம் கற்றுக்கொடுக்கும் பயில்வான் முதுகில் அடித்தால் வலி ஏற்படாமல் இருக்க மூன்று சட்டைகள் போட்டிருந்தார். அதை அறிந்துகொண்ட பயில்வான் மெல்ல கண்ணாயிரத்திடம்…சிலம்பம் கற்றுக்கொள்லதற்கு முன்பு உடற்பயிற்சிசெய்யவேண்டும்…அதற்கு சட்டையை கழற்றவேண்டும் என்று கூறினார்.உடனே கண்ணாயிரம் ஒருசட்டையை கழற்றிவிட்டு இதுபோதுமா என்று கேட்டார். பயில்வான் கோபத்துடன் இரண்டு சட்டைகளையும் கழற்றுங்க என்றார். கண்ணாயிரம் வேறுவழி இல்லாமல் இரண்டு சட்டைகளையும் கழற்றினார்.பனியன் போடாத அவரது மார்பளவை பார்த்த பயில்வான்….என்ன இது உடம்பா…இல்லா…துரும்பா…இப்படி இருந்தா எப்படி வேகமாக சிலம்பை சுற்றமுடியும். உங்களை பச்சை முட்டை சாப்பிடச்சொன்னேனே சாப்பிட்டிங்களா என்று கேட்டார்.
உடனே கண்ணாயிரத்துக்கு பச்சை முட்டை சந்தேகம் வந்தது.பயில்வான் சார் நீங்க சொல்லுறது சரிதான். பச்சை முட்டைக்கு நான் எங்கே போறது. கூகுளில் பார்த்தால் பச்சைமுட்டைன்னா ஈமுகோழி முட்டைன்னு போட்டிருக்கு…நம்ம. ஊரிலே அந்த முட்டையே இல்லையே என்றார்.
அதை கேட்டதும் பயில்வானுக்கு தலை சுற்றியது. யோவ்…நான் சொன்னது பச்சைநிற முட்டை இல்ல.. பச்ச முட்டை..போதுமா…என்று சொன்னார். கண்ணாயிரம்விடவில்லை. பச்சமுட்டைன்னா எது என்றுமடக்கினார். பச்ச முட்டைன்னா கோழிமுட்டைதான்..என்றார் பயில்வான். ஆனால் கண்ணாயிரத்துக்கு சந்தேகம் தீரவில்லை.

ஏங்க.அப்படின்னா கோழிமுட்டைன்னு சொல்ல வேண்டியதுதானே..ஏன்பச்ச முட்டைன்னு சொல்லணும் என்று எதிர்கேள்வி கேட்டார்.பயில்வானுக்கு கோபம் வந்தது. ஏங்க..உங்களுக்கு புரியலய்யா பச்ச காய்கறி சொல்லுறமில்லையா…அதுமாதிரிதான் பச்சமுட்டையும் புரியுதா இல்லையா என்று கேட்டார். கண்ணாயிரத்துக்கு புதிய யோசனை தோன்றியது.காய்கறி பச்சை நிறத்தில இருக்குது.. அதனால பச்ச காய்கறின்னு சொன்னாங்களா…இல்ல வேறமாதிரி சொன்னாங்களா…சந்தேகமாக இருக்கே..என்று இழுத்தவர்..மனக்கண்ணில் கேரட்டும் தக்காளிப்பழமும் வந்து போனது.அது சிவப்பால்லா இருக்கு..இதை பச்ச காய்கறின்னு சொல்லமுடியாதே என்று தனக்குள் முணங்கினார்.
அதைபார்த்த பயில்வான் மெல்ல கண்ணாயிரம் உனக்கு இப்படி விதவிதமா யோசிக்க யார்சொல்லிக்கொடுத்தா…சொல்லு என்றார்.கண்ணாயிரம் சிரித்தபடி நானா…ஏதாவது யோசிப்பேன்…அதுவா வரும்..ஆனா மொக்கையா இருக்குன்னு என்பொண்டாட்டிவையும் என்று சொன்னார். பிறகு பாராட்டவா செய்வாங்க…உன் யோசனையை தூக்கிப்போடு. பச்ச காய்கறின்னா நிறத்தை சொல்லல செடியிலிருந்து பறிச்சவுடன் பசுமையா இருக்கா அதனாலதான் பச்ச காய்கறின்னு சொன்னாங்க..இதை குழம்புவைக்க வெட்டிப்போட்டு மசாலா சேர்த்து அவிச்சிட்டா அப்புறம் அது பச்ச காய்கறி கிடையாது..போதுமா…அப்படித்தான்….கோழி போடுறது பச்ச முட்டை.அதை தண்ணியிலே போட்டு அவிச்சா அவிச்சமுட்டை இப்பம் தெரியுதா என்று கேட்டார்.கண்ணாயிரம் தலையை ஆட்டினார்.அதைபார்த்த பயில்வான் சிரித்தபடி..நாளையிலே இருந்து தினமும் ஒரு பச்சமுட்டையை உடைச்சி அப்படியே குடிக்கணும் சரியா என்றார்.
கண்ணாயிரம் புரிந்து கொண்டு எங்க வீட்டில கோழி அடைவச்சிருக்கோம்..முட்டையை கோழி அடைகாக்குது.அது பக்கத்திலே போகமுடியாது.கொத்தும்.வெளியிலே உள்ள கடையிலேதான் முட்டை வாங்கணும்.நிறைய செலவாகுமா என்று அப்பாவியாக கேட்டார்.
அதை கேட்ட பயில்வான்…அதிக செலவாகாது…கொஞ்சம்தான் செலவாகும். நானும் வெளியிலே முட்டைவாங்கி சாப்பிட்டா கட்டுப்படியாகாதுன்னு நானே முட்டைகடை திறந்திட்டேன்..அந்த கடையிலே வாங்குங்க..நல்ல முட்டையாகவும் இருக்கும்.விலையும் சீப்பா இருக்கும் என்றார்.
கண்ணாயிரத்துக்கு இந்த சீப்பு என்பது மனசை குழப்பியது .ஆனால் கேட்க பயம்.பயில்வான் அடித்துவிட்டால் என்னசெய்வது. அதுக்கு பயந்தால் எப்படி..கேட்டுறுவம்..ஏங்க..விலை சீப்புன்னு சொன்னீங்களே…சீப்புவிலைதான் முட்டையா என்று கேட்டுவைத்தார்.பயில்வான் புரிந்துகொண்டார்.சீப்புவிலை வேற முட்டைவிலை வேற..ஆனா முட்டைவிலை சீப்பு என்றார்.
கண்ணாயிரத்துக்கு ஒன்றும் ஓடவில்லை.என்னடா அது..ஒரே குழப்பமா இருக்கு என்று கன்னத்தில்விரல்வைத்து யோசிக்க தொடங்கினார்.அதைபார்த்த பயில்வான்மெல்ல கண்ணாயிரத்தைப்பார்த்து இன்னும் சந்தேகம் தீரலைய்யா…முட்டைவிலை குறைவு என்பதை முட்டைவிலை சீப்புன்னு சொன்னேன். கண்ணாயிரம் நம்ம கடையிலே தினம் பச்ச முட்டவாங்கி சாப்பிடு..உடம்பு என்ன மாதிரி..கும்முன்னு வந்திரும் ..சரியா என்றார்.கண்ணாயிரம் மெதுவாக சரிதான் என்று சொன்னார்.
சரி….இன்னைக்கு முதல் உடற்பயிற்சி…ஒற்றைக்காலில் நின்று சூரியனை வணங்கணும்…எங்கே …செய்யுங்கபார்ப்போம் என்றார்.கண்ணாயிரம் ஒற்றைகாலை தூக்கி மற்றொருகாலை ஊன்றி சூரியனை நோக்கிகைகூப்பி வணங்கியபடி நின்றார்.அதைபார்த்த பயில்வான் ம்…அப்படிதான்…இப்படியே ஒருமணி நேரம் நில்லங்க….நான் முட்டைக்கடைவரைக்கு போயிட்டு வந்திடுறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். கண்ணாயிரம் ஒற்றைக்காலில் நிற்பதை எல்லோரும் பார்த்துவிட்டு சென்றார்கள்.கண்ணாயிரம் மனைவி வெளியே வந்து எட்டிப்பார்த்தார்.ஆ..ஹா..அருமையான உடற்பயிற்சி …நடக்கட்டும் என்று சொல்லியபடி மீண்டும் வீட்டுக்குள் போனார். முட்டைக்கடைக்கு போனபயில்வான் வியாபாரத்தில் மும்முரமாகி கண்ணாயிரத்தை மறந்துவிட்டார்.
ஒருமணி நேரம் கழித்து திடீரென்று நினைவுவர…கடையை ஒருசிறுவனைபார்த்துக் கொள்ளசொல்லிவிட்டு வேகமாக அங்கு ஓடிவந்தார்.
அங்கு அவர்பார்த்த காட்சி அவருக்கு அதிர்ச்சியை தந்தது.ஒற்றைக்காலில் நின்ற கண்ணாயிரம் வெயில் தாங்காமல் கீழே மயங்கி கிடந்தார். (தொடரும்)

  • வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.