May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

விடுமுறை எடுக்காமல் லண்டனுக்கு சுற்றுலா சென்ற பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்டு

1 min read

The woman, who traveled to London without taking a vacation, was arrested by IPS. Officer Suspended

28.4.2022
முறைப்படை விடுப்பு எடுக்காமல் லண்டனுக்கு சுற்றுலா சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

பெண் அதிகாரி

உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் அலங்கிரிதா சிங். பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கடந்த ஆண்டு பணியில் இருந்து முறைப்படி அதிகாரப்பூர்வமாக விடுமுறை எடுக்காமல் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி தனது உயர் அதிகாரிக்கு அலங்கிரிதா வாட்ஸ் மூலம் வீடியோ கால் செய்து தான் தற்போது லண்டனில் இருப்பதாக நாளை (அக்.20) பணிக்கு வர முடியாது எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் பணிக்கு வராமல் இருந்துள்ளார்.

சஸ்பெண்டு

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் விளக்கம் கோரி அலங்கிரிதாவுக்கு உத்தரபிரதேச உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் 5 மாதங்கள் ஆன நிலையில் அலங்கிரிதாவின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என அவரை சஸ்பெண்டு செய்து உத்தரபிரதேச அரசு நேற்று உத்தரவிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.