இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,377 ஆக உயர்வு; 60 பேர் பலி
1 min readDaily corona exposure in India rises to 3,377; 60 killed
29/4/2022
தினசரி கொரோனா பாதிப்பு 3,377 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றால் 60 பேர் பலியாகினர்.
இந்தியாவில் கொரோனா
தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்கிறது. கடந்த புதன்கிழமை 2,927, வியாழக்கிழமை 3,303 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று காலை 3,377 ஆக அதிகரித்தது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,68,799 லிருந்து 4,30,72,176 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,496 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,28,128 லிருந்து 4,25,30,622 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 17,801 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,980 லிருந்து 17,801 ஆனது.
60 பேர் சாவு
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,23,753 ஆக உயர்ந்தது.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் காலையில் வெளியிட்டது.