இந்தியாவில் புதிதாக 3,324 பேருக்கு கொரோனா
1 min readCorona for 3,324 newcomers in India
1.5.2022
இந்தியாவில் புதிதாக 3,324 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 3,688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை புதிதாக 3,324 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 324 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 79 ஆயிரத்து 188 ஆக உயர்ந்தது.
40 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,23,843 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,876 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,36,253 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 19,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 189.17 கோடி பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,95,267 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.