June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

ஏப்ரல் மாதம் புதிய உச்சமாக ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

1 min read

GST collection hits new high of Rs 1.68 lakh crore in April

1.5.2022
நாட்டில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி

ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏபரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 33,159 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 41,793 கோடி ஆகும். பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.36,705 கோடி உள்பட ஐ.ஜி.எஸ்.டி. வசூல் ரூ.81,939 கோடி ஆகும்.

பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.857 கோடி உள்பட செஸ் வரி மூலம் ரூ.10,649 கோடி கிடைத்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட ஏப்ரல் மாதத்தில் 25,000 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *