கண்ணாயிரம் பையில் வந்த சுடிதார்/ நகைச்சுவை கதை
1 min read
Salwar Kameez in Kannayiram’s bag / Stoy by Thabasukumar
15.5.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்ல வேட்டி சட்டைகளை அயர்ன்பண்ணிக்கொண்டுவந்தார்.பின்னர் சின்ன சூட்கேசில் இருந்த கூலிங் கிளாஸ் மற்றும் தொப்பியை எடுக்க ஏணிவைத்து மச்சியில் ஏறினார் .அங்கு அவை கிடைக்காததால் கோபத்தில் ஏணிவழியாக. இறங்கினார் .ஏணியை பிடித்துகொண்டிருந்த அவர் மனைவி செல்போனை எடுக்க சென்றபோது ஏணி சரிந்ததால் கண்ணாயிரம் கீழே விழுந்தார். அதில் ஏணியின் முன்பகுதிகால் ஒடிந்ததால் பூங்கொடி சத்தம்போட கண்ணாயிரம் என்ன கீழேவிழுந்த நம்முடைய கால் எப்படி இருக்குன்னு கேட்காம ஏணியின் கால் ஒடிஞ்சதுபற்றி சத்தம் போடுறாளே என்று கவலைப்பட்டார்.
மனைவியை சமாதானப்படுத்த . ..பூங்கொடி..கவலைப்படாதே…குற்றாலம் போய்வந்ததும் புது ஏணிவாங்கிவந்திடுவோம்..என்று சொன்னார். அதற்கு பூங்கொடி. ..ஏங்க உடைந்த ஏணி சாதரண ஏணி இல்ல…எங்க தாத்தாகாலத்திலிருந்து பயன்படுத்திய ஏணி. எனக்கு சீதனமா வந்த ஏணி…அதை உடைச்சுப்புட்டியளே என்க கண்ணாயிரமோ….பழைய ஏணிதானே…விடு.. நீவிட்டதினாலேதான அது கீழே சரிந்துவிழுந்துச்சு ….நீவிடப்போறன் என்று சொல்லி இருந்தா, நான் உஷாரா இருந்திருப்பேன்ல்ல…எல்லாம் உன் தப்புதான் என்று குற்றம் சாட்டினார்.
உடனே பூங்கொடி .கோபத்தில் ..ஆமாங்க எல்லாம் என் தப்புதான் …செல்போன் அடிச்சதாலே. .ஏ
ணியைவிட்டுட்டு அதை எடுக்க போனேன். அதுக்குள்ள .இப்படி ஆகிப்போச்சு… என்ன செய்ய என்று சொல்லியபபடி ஏணியை தூக்கி ஓரமாக வைத்தார்
.
சரி…அடுத்த கதையை பார்ப்போம்…நீ துணியை அயர்ன்பண்ண கொடுக்க போனீயே
அந்த துணியை வாங்கிட்டு வரலையா என்று கண்ணாயிரம் கேட்டார்.
பூங்கொடி கோபத்தில் ..நீங்கபோன உடனே அயர்ன்பண்ணி வாங்கிட்டுவந்திட்டிங்க. .போன இடத்திலே சும்மா இருந்தியளா… ஊரே கேட்கிறமாதிரி குற்றாலம்போறன்….குற்றாலம்போறன்னு கத்தி யிருக்கிய. ..அதை கேட்டதும் எல்லாரும் அயர்ன்பண்ணுறதுக்கு அங்கே திரண்டுவந்துட்டாங்க… நான் என்னசெய்யமுடியும்.. கூட்டம் முடிஞ்சாத்தான் என் துணியை அ
யர்ன்பண்ணித்தருவான்…அதுக்கு ராத்திரி ஆகும் …நீங்
கபோயிவாங்கிட்டுவாங்க…என்று கத்தினார்.
கண்ணாயிரம் ஏன்வாயை கொடுத்தோம் என்றாகிவிட்டது. சரி..சரி… இரவு நான்போய்வாங்கிட்டுவந்திடுறேன். ..நீ சத்தம்போடாதே என்றார்.
பூங்கொடியும்…சரி என்று தலையை ஆட்டினார். கண்ணாயிரம்…உடனே கூலிங்கிளாஸ் மற்றும் தொப்பி எங்கிருக்கு என்று கேட்டார்.
பீரோவில் இருக்கு என்று பூங்கொடிசொல்ல கண்ணாயிரம் வேகமாக அதை திறந்தார். அதிலிருந்த சேலை சட்டையையெல்லாம் உருட்டி கூலிங்கிளாஸ் மற்றும் தொப்பியை எடுத்தார். கூலிங்கிளாசை எடுத்து துணியால் துடைத்து கண்ணாடியில் போட்டுபார்த்தார். தொப்பியை எடுத்து தலையில்மாட்டினார். நிலைக்கண்ணாடியில் போய்பார்த்தார். ம்..அழகா இருக்கு.. என்று தன்னைத்தானே புகழ்ந்துகொண்டார். அப்புறம் சூட்கேஸ்…கையில் சின்னதடி…அதுக்கு எங்கே போறது…என்று நினைத்தவர் பூங்கொடி..எனக்கு சூட்கேஸ் எங்கே என்றுகேட்டார். அதை கேட்ட பூங்கொடி என்ன சத்தம் போடுறீய…நீங்க அயர்ன்பண்ணி துணியைவச்சியளே அந்த பழைய கூட்கேசை எடுத்திட்டுவாங்க என்றார். கண்ணாயிரம்…ம்..அது பழசு…சரியா பூட்டாது.. அது வேண்டாம்.என்று சொல்ல பூங்கொடி…கத்தாதீங்க..என் சூட்கேசை வச்சுக்கிடுங்க…நான் டிரங்பெட்டியை தூக்கிட்டுவர்ரேன்..போதூமா என்று சொல்ல கண்ணாயிரம் சிரித்தார். சரி அடுத்து…கையிலே வச்சிக்கிட..சின்ன கைத்தடி வேணுமே..குரங்கோ நாயோவிரட்டினா திருப்பி அடிச்சிவிரட்டவேணுமே..என்னசெய்யலாம் என்று கண்ணாயிரம் யோசித்தார். அப்போது சிலம்பம் கற்க பயில்வான் தந்த சிலம்பு கம்பு நினைவுக்கு வந்தது. அதிலேபாதியை வெட்டிவிடவேண்டியதுதான்..அதுதான் சரிப்பட்டுவரும்..என்றவர் வீட்டுக்கு வெளியே அரிவாளுடன் சென்றார். அங்கேகிடந்த சிலம்புகம்பை பார்த்தார். ஒருமுழம் அளவுக்கு அளந்து சிலம்பு கம்பில் வெட்டினார். கைத்தடி ரெடி..அப்பாட..ஒருவழியா தயார்பண்ணியாச்சு..இனி கவலை இல்லை என்றார்.
கண்ணாயிரம் சுற்றி சுற்றிவருவதைபார்த்த பூங்கொடி ஏங்க..மணி ஒன்பதாகிவிட்டது…அயர்ன்பண்ணுற கடையிலேபோய் என் சேலையையும் சட்டையையும் வாங்கிட்டுவாங்க என்று காசு கொடுத்து அனுப்பினார்.
கண்ணாயிரம் சிரித்துகொண்டே…அந்த கடையை நோக்கி சென்றார்.கூட்டம் குறைந்திருந்தது. கடைக்காரரிடம் ..என் மனைவி
பூங்கொடி கொடுத்த சேலை சட்டை அயர்ன்பண்ணியாச்சா…கொடுங்க என்றார்.
ஒருபையை எடுத்து காட்டிய சிறுவன் இது உங்கபைதானே…என்று கேட்டான். கண்ணாயிரம் அதை பார்த்துவிட்டு ஆமா..ஜவுளிக்கடை பெயர்போட்டிருக்கு..மஞ்சள்பை..எங்க பைதான் என்றார்.
சரி..பணத்தை கொடுங்க..பையைத்தர்ரேன் என்று சொல்ல கண்ணாயிரம் பணத்தை கொடுத்துவிட்டு மஞ்சள்பையை வாங்கினார். பாவாடை தாவணியில் பாத்த உருவமா..என்ற பாடலை பாடியவாறு வீட்டுக்கு வேகமாக நடந்தார். அவர் வருகைக்காக பூங்கொடி காத்திருந்தார். கண்ணாயிரம் மெல்லிசைபாடலை பாடியவாறே பூங்கொடியிடம் மஞ்சள்பையை நீட்டினார். பூங்கொடி ஆவலுடன் பையை திறந்துபார்த்தார். அதிர்ச்சி அடைந்தார்.
ஏங்க..இது என்னுடையது இல்ல..இதிலே சுடிதாரு கவுனு இருக்கு..மாத்திவாங்கிட்டுவந்திட்டிங்க…என்று கத்தினார்.
கண்ணாயிரம்..ஆ…பைநம்ம பைதேனே..என்றார். அதைகேட்ட பூங்கொடி..ஏங்க பைநம்ம பைதான்..அதிலே இருக்கிற சுடிதார் கவுனு எல்லாம் என்னுடையது இல்ல..நான் என்னைக்கு சுடிதார் போட்டேன்…என்னுடையது ஒரு பச்சைசேலை ஒரு பச்சை சட்டை ஒரு மஞ்சள் சேலை ஓருமஞ்சள் சட்டை..புரியுதா.. இதை கொடுத்துட்டு அதைவாங்கிட்டுவாங்க…போங்க…கூட்டம் அதிகம் இருந்ததால….அடையாளம் தெரியாம மாத்திக்கொடுத்துட்டான்…போங்க..போங்க…சீக்கிரம் என்றுவிரட்டினார்.
கண்ணாயிரம் ம்..நமக்குன்னு சோதனை இப்படி வருது…அங்கேயே பிரிச்சி பார்த்திருக்கணும்..பை நம்ம பைதானே..சேலையும் நம்ம சேலை இருக்குன்னு நினைச்சேன்..நினைப்புதான்புழப்ப கெடுக்குது என்றபடி கடையை நோக்கி வேகமாக நடந்தார்.
சுடிதாரு எப்படி வந்தது..யாருடையது என்ற சிந்தனைஓடியது. யார் சுடிதாரா இருந்தா நமக்கென்ன…நம்முடைய சேலையை நாம வாங்கிட்டுவருவோம்..காசுதான் கொடுத்தாச்சே…என்றபடி நடந்தார். கடைவீதியில் சென்றார்.அயர்ன் பண்ணுகிற கடை பூட்டிக்கிடந்தது. ஆ..இந்த கடையை வேற கடையா..மாறிப்போச்சா என்று திணறினார். பக்கத்தில் மளிகைகடையை அடைத்து கொண்டிருந்தவரிடம்…அண்ணாச்சி…அயர்ன்மண்ணுகிற கடை. இங்கே இருந்துச்சே எங்கே என்று கேட்டார். அதற்கு அவர்…இதோ இருக்குதே..அந்த கடைதாம்பா…இப்போதான் கடையை பூட்டிட்டு போனாங்க என்றார். இனிவரமாட்டாங்களா…நாளைக்குத்தான் வருவாங்களா…என்று கண்ணாயிரம் கேட்க…மளிகைகடைக்காரர் சிரித்தபடி…என்ன தம்பி..நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை..விடுமுறை…கடை திறக்கமாட்டாங்க…இனி திங்கட்கிழமைதான் கடை திறப்பாங்க..போயிட்டுவாங்க என்றார். என்ன நாளைக்கு விடுமுறையா…அப்போ நான் எப்படி சுடிதாரை மாத்துவேன் என்ற கண்ணாயிரம் நாளைக்கு காலையிலே குற்றாலத்துக்கு போகணுமே..சேலை இல்லாமல் எப்படிபோவது என்று புலம்பியபடி நின்றார்.
வே.தபசுக்குமார்.புதுவை.