June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயித்தை பந்தாடிய பெண்கள்/ நகைச்சுவை கதை

1 min read

Theleadies who played eyeball/ Stoyr by Thabasukumar

9.6.2022
கண்ணாயிரம் தன்மனைவி பூங்கொடியுடன் சுற்றுலா பஸ்சில் புதுவையிலிருந்து குற்றாலம் புறப்பட்டு சென்றார். பஸ் கன்னியகோவில் வந்தபோது இறைச்சிக்கடைகாரர் மோட்டார் சைக்கிளில் வந்து சுடிதார் சுதாவுக்கு பிரியாணியும் மினரல்வாட்டர் பாட்டிலும்வாங்கிக்கொடுத்தார். அதைபார்த்த பூங்கொடி ஏங்க நீங்க ஒருநாளைக்காவது பொண்டாட்டிக்கு பிரியாணிவாங்கி கொடுத்திருக்கியளா என்று கேட்டார். அதற்கு கண்ணாயிரம் உடனே..ஏய் இறைச்சிக்கடைக்காரர் பிரியாணிவாங்கி கொடுத்தது பொண்டாட்டிக்கு அல்ல…பொண்டாட்டிமாதிரி என்றார்.
இதையடுத்து பொண்டாட்டிக்கு எதிர்பதம் வைப்பாட்டின்னு பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சுடிதார் சுதா பாட்டிமாதிரி இல்லையே..அழகாகத்தானே இருக்கு..பிறகு ஏப்படி பாட்டின்னு சொல்வமுடியும் என்று பூங்கொடியிடம் கேட்டார். அதற்கு அவர்..எனக்கு அதெல்லாம் தெரியாது..கிராமத்திலே அப்படித்தான் சொல்வாங்க..அதான் சொன்னேன் என்று சொன்னார்.
கண்ணாயிரம் தனது சிந்தனையை சுழலவிட்டார். பின்னர் பூங்கொடி..வைப்புபியூட்டி என்பது மருவி வைப்பாட்டின்னு வந்திருக்குமா…என்று கேட்டார். பூங்கொடி கோபத்துடன்..என்ன…வைப்பாட்டி பியூட்டி பொண்டாட்டி மொக்கைன்னு சொல்லவர்ரீயளா என்று ஆவேசப்பட்டார்.
கண்ணாயிரம் உடனே…ஏய் அப்படி சொல்லல…வைப்பாட்டிங்கிற வார்த்தையைபற்றி ஆராய்ச்சி பண்ணினேன்…அவ்வளவுதான் என்றுசொல்ல…நீங்களும் உங்க ஆராய்ச்சியும்…அதை தூக்கி தொல்லைப்போடுங்க என்றார்.
கண்ணாயிரம் சரி என்று அமைதியானார்.
அப்போது சுடிதார் சுதா செல்போனுடன் எழுந்து…யாருங்க..கண்ணாயிரம் என்கிறது என்று கேட்க கண்ணாயிரம் எழுந்து..நான்தான்…ஆ இல்லை..இல்லை..ஆநான்தான்..எதுக்கு என்று தடுமாறினார். உடனே சுடிதார் சுதா சிரித்தபடி…உங்களுக்குத்தான் போன்..பேசுங்க..பயப்படாதீங்க..என்றபடி கண்ணாயிரத்திடம் கொடுத்தார்.
அவர்…போனில பேசுறது யாரு என்று கேட்டபடி போனைவாங்கி ஹலோ என்றார். எதிர்முனையில் பேசியவர் ஏய்…போனை சுவிட்ஆப் பண்ணிவச்சிட்டா பேசமுடியாதுன்னு நினைச்சியா…என்று மிரட்ட கண்ணாயிரம் பதட்டத்தில் யார் நீங்க என்று கேட்டார்.
அதற்கு எதிர்முனையில் பேசியவர்…நானா…நானா..எமன்டா..எமன்..இப்போ தெரியுதா என்று சொல்ல…கண்ணாயிரம் தெரியல என்றார்.
அதைகேட்டதும் எதிர்முனையில் பேசிய நபர்…ஏய் ஐவுளிக்கடைக்காரரை நினைவிருக்கா என்று கேட்க கண்ணாயிரம் உஷாராகி…ஓ நீங்களா..ஏன் குரலை மாத்திபேசுறீங்க…ஜலதோஷமா…தொண்டை கட்டிக்கிட்டா என்று விசாரித்தார்.
ஜவுளிக்கடைக்காரர் கோபத்தில்…ஏய் உங்கிட்ட கத்திகத்திதான் குரல் இப்படி ஆயிட்டு…ஆமா..நீ என்ன பணமே கொடுக்கமாட்டேன்னு சொன்னியாமே…கோர்ட்டுக்கு போவேன்னு சொன்னியாமே..என்று அடுக்கிக்கொண்டுபோக…கண்ணாயிரம் பதிலுக்கு யார் உங்ககிட்ட அப்படி சொன்னா…என்று மடக்க இறைச்சிக்கடைக்காரர்தான் சொன்னார்…அவர் பிரியாணி பொட்டலம் கோடுக்கவந்தபோது ஒண்ணும் தெரியாத மாதிரி பதுங்கினியா..இல்லையா…எங்கிட்ட இருந்து நீ தப்பமுடியாது..எனக்கு அங்கே இன்பார்மர் இருக்காங்க தெரியுமா…ஏய் பணம் தருவியா..தரமாட்டியா..என்று மிரட்ட கண்ணாயிரம் ..அது வந்து தர்ரேன்…என்று வாய்குளறியபடி சொன்னார்.
தர்ரேன்னு சொன்னா எப்போ தருவே என்று ஜவுளிக்கடைக்காரர் கேட்க..கண்ணாயிரமோ..பணம்வரும்போது தர்ரேன் என்று சொல்ல பணம் எப்போவரும் என்று ஜவுளிக்கடைக்காரர் கேட்க…தேர்தல்வரும் போதுதான்வரும் என்று கண்ணாயிரம் சொல்ல…ஏய் நீ திருப்பி திருப்பி அதையே சொல்லற…திருப்பி திருப்பி அதையே சொல்லுற..என்று ஜவுளிக்கடைக்காரர்….தொடர்ந்து பேசி மயக்கமாக..கண்ணாயிரம் செல்போனை சுடிதார் சுதாவிடம் கொடுத்தார்.
என்ன பேசிட்டிங்களா என்று அவர் கேட்க கண்ணாயிரம் காதை பொத்திக்கொண்டு ஆமா…ஆமா..ஆமா..ஆமா..என்றபடி சீட்டில் உட்கார்ந்தார்.
என்னங்க திருப்பி திருப்பி அதையே பேசுறீங்க..என்று பூங்கொடி பதட்டமாக கண்ணாயிரம் நிதானமாகி…ஒண்ணுமில்ல..ஒண்ணுமில்ல…ஒண்ணுமில்ல என்றார்.
பூங்கொடி…ஏங்க உங்களை யாரும் மிரட்டினார்களா என்று கேட்க ஒண்ணுமில்ல…ஒண்ணுமில்ல..ஒண்ணுமில்ல…என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
பூங்கொடி கோபமாக…சுடிதார் சுதாவிடம் சென்று யாருடி..போனில வந்தது…என்று அதட்ட சுடிதார் சுதா பதிலுக்கு என்னையா டீ போட்டு கூப்பிடுற என்று கேட்க பூங்கொடி உடனே..உன்னைத்தாண்டி கூப்பிடுறேன்..உனக்கு என்ன மரியாதைவாழுது என்று எகிற சுடிதார் சுதா கோபத்தில்..ஏய் என்னடி வாய் நீளுது..அறுத்திடுவேன் என்க பூங்கொடி சேலையை மடக்கிக்கொண்டு ஏய்..என்னயே மிரட்டுறீயா என்று பாய கண்ணாயிரம் அய்யோ போச்சு என்றபடி பூங்கொடியை கையைபிடித்து இழுத்தார்.
பூங்கொடி ஆவேசமாக கண்ணாயிரத்தை தள்ளிவிட கண்ணாயிரம் சுடிதார் சுதாமேல் விழ அவர் தள்ளிவிட கண்ணாயிரம் தடுமாறி பஸ்சீட்டில் விழுந்தார்.
அவர் பல்லிலிருந்து ரத்தம் கொட்ட..பயில்வான் பதறியடித்தபடி ஓடிவந்தார்.அமைதி…அமைதி…என்னம்மா இப்படி பண்ணுறீயளம்மா…பாவம் கண்ணாயிரம்…போங்க..சண்டையை ஊருலபோய்வச்சுக்குங்க…சீட்டிலேபோயி உட்காருங்க என்று அதட்டினார்.
கண்ணாயிரம் கைகுட்டையால் வாயை பொத்தியபடி…ஆ…வலிக்குதே என்று முணங்கினார்.
கண்ணாயிரம் பரிதவிப்பதை பார்த்து பூங்கொடி ஓடிவந்து என்னங்க ஆச்சு…அவா உங்கள தள்ளிவிட்டாளா என்று கேட்க கண்ணாயிரம் இல்ல…இல்ல..நானாகத்தான் விழுந்திட்டேன்…என்று சமாளித்தார்.
இல்ல..நீங்க மறைக்கிறீங்க என்று பூங்கொடி மீண்டும் சுடிதார் சுதாவுடன் மோத தயாரானார். கண்ணாயிரம் அவரை சீட்டுக்கு இழுத்து போனார்.ஆ…என்று ஆவேசமாக பூங்கொடி கத்தினார்.
கண்ணாயிரம் வாயை பொத்து…வாயைபொத்து என்று மனைவியை எச்சரித்தார். பயில்வான் கோபத்துடன்…அமைதியாக வரியளா..இல்லையா..ஏன் இப்படி தகராறு பண்ணுறீங்க.. இனி தகராறு பண்ணுனா இங்கே இறக்கிவிட்டுட்டு பௌயிடுவேன்…அமைதியாக இருங்க என்றார்.
அதன்பிறகு சுடிதார்சுதாவும் பூங்கொடியும் அமைதியானார்கள்.
பஸ்டிரைவர் சிரித்துகொண்டே வேகமாக பஸ்சை ஓட்டினார்.அங்கும் இங்கும் தள்ளிவிட்டதில் கண்ணாயிரத்துக்கு நம்பர் ஒண் வந்தது. ஆனால் டிரைவரை நிறுத்த சொன்னாலும் நிறுத்தமாட்டாரு…கீழே தள்ளிவிட்டதில் உதடுவேறு வீங்கிவிட்டது. சரியாக பேசமுடியல…என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
பயில்வானை பார்த்து ஒற்றைவிரலை காட்டினார். அவர் புரியாமல்..ஏங்க குற்றாலத்துக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கு..ஒருமைல் தூரமான்னு கேட்கிய…என்று அதட்டினார்.
பஸ்குலுக்கிய குலுக்கலில் கண்ணாயிரத்தால் அடக்க முடியவில்லை.பூங்கொடியிடம் ஒற்றைவிரலை காட்டினார். அதற்கு அவர் ஏங்க..விரலிலும் அடிபட்டுச்சா…என்று கேட்க கண்ணாயிரம் ம்…ம்…ம்…என்று தலையை அசைத்தார். அப்படினானா..என்னங்க…ஒண்ணுக்கா மினரல்வாட்டரை அதிகமா குடியாதிங்கன்னா கேட்டாதானே…போய் டிரைவருக்கிட்டே போய் கெஞ்சி கேளுங்க..பஸ்சை நிறுத்துவாரு என்க…கண்ணாயிரம் மலங்க மலங்க விழித்தபடி டிரைவரை நோக்கி நகர டிரைவர் அவரது அவசரத்துக்காக காட்டுபகுதியில் நிறுத்தினார். கண்ணாயிரம் ஓடிபோய் கதவை திறந்தபடி காட்டுபகுதிக்குள் ஓடினார்.
இதையடுத்து பஸ்சிலிருந்த எல்லோருமே இறங்கி ஆங்காங்கே ஒதுங்கினார்கள். கண்ணாயிரம் அப்பாடன்னு பெரு மூச்சுவிட்டபடி காட்டுக்குள்ளிருந்து பஸ்சை நோக்கி நடந்துவந்தார்.
டிரைவரை பார்த்து வணக்கம் போட்டார். அவர் உதடு வீங்கியிருப்பதை பார்த்து ஏல்லோரும் சிரித்தபடி செல்ல கண்ணாயிரமும் சிரித்துக்கொண்டார்.
பஸ்சின் ஒரத்தில் நின்ற சுடிதார் சுதா கண்ணாயிரத்தை பார்த்து நாக்கை கடித்தார். அதைபார்த்த கண்ணாயிரம் வந்ததடா மறுபடியும் ஆபத்து என்று வேகமாக பஸ்சில் ஏறினார்.

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.