May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

மும்பை கட்டிட விபத்தில் 19 பேர் பலி

1 min read

19 killed in Mumbai building accident

28.6.2022
மும்பை குர்லா நகரில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

கட்டிடம் இடிந்தது

மராட்டிய மாநிலம் மும்பையின் குர்லா நகரில் 4 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்து தீயணைப்புப் படையினரும், போலீசாரும் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.


19 பேர் பலி

இதற்கிடையே, குர்லா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். குர்லாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டபோது அங்கிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மேலும், 2 புறாக்களும் உயிருடன் மீட்கப்பட்டன. அடுக்குமாடி மிகவும் மோசமான, பாழடைந்த நிலையில் இருந்தே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டிட விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.