இன்று மிகசிறப்பான-அபூர்வமான நாள்
1 min read
Today is a great-rare day
2/7/2022
இந்த சுபகிருது ஆண்டில் சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வ அதே சமயம் சிறப்பான நாட்கள் வருகிறது. ஆனி மாதம் 18&ந் தேதி (2.7.2022) சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் ஆனி மாதம் 19&ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 6.29 மணிவரை கிரக அமைப்புகள் சிறப்பாக அமையும். அதாவது கும்பம் முதல் கடகம் வரை தொடர்ந்து 6 ராசிகளில் கிரகங்கள் அமைந்துள்ளன. அன்றைய தினம் சனி, குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய கிரங்கள் தங்கள் ஆட்சி வீட்டில் இருக்கின்றன.
இதில் ராகு ஆட்சி பலத்துடன் கூடிய செவ்வாயுடன் இருக்கிறார். சூரியன் ஆட்சி பலத்துடன் கூடிய புதனுடனும் சேர்ந்து புதாதித்ய யோகம் பெறுகறறார். கேது விசாகம் 2&ம் பாதத்தில் இருந்து புஷ்கர நவாம்சம் பெறுகிறார். சந்திரனுக்கு குரு பார்வை இருப்பதால் ஆயில்யம் நட்சத்திர தோஷம் கிடையாது. எல்லா கிரகங்களும் வலுத்து இருக்கு இந்த நாள் ஒரு சிறப்பான நாள். இப்படி சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் அமையும். இந்த நாளில் குழந்தை பிறந்தால் சிறப்பான அந்தஸ்தை பெறும். சில குழந்தகள் நாட்டை ஆளும் பலம் கூட பெறலாம். இந்த நாளில் மரண யோகம் இருந்தாலும் தோஷம் கிடையாது. அன்று பூஜைகள், யாகங்கள் நடத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
அன்றைய தினம் இயலாதவர்கள் ஆனி 12&ந் தேதி (26.6.2022 )முதல் ஆனி 22&ந் தேதி( 6.7.2022) வரையிலும் பூஜைகள் செய்து பயன்பெறலாம் என்று ஸ்ரீவாச பஞ்சாங்கம் கணித்துள்ளது.