இந்தியாவில் புதிதாக 20 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா
1 min read20 thousand 409 new corona cases in India
29.7.2022
இந்தியாவில் புதிதாக 20 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த புதன்கிழமை பாதிப்பான 20 ஆயிரத்து 557-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 79 ஆயிரத்து 730 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 9 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
32 பேர் பலி
கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 203 கோடியே 60 லட்சத்து 46 ஆயிரத்து 307 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.