May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பிக்கபட்ட உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த ஐகோர்ட்டு எச்சரிக்கை

1 min read

High Court warns to implement order issued to remove water encroachment within 10 days

1.8.2022
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறிய உத்தரவை தமிழக அரசு 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. 10 நாள்களில் அகற்றவில்லை என்றால் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்படும் என்றும் சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது:-

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறிய உத்தரவை தமிழக அரசு 10 நாள்களில் அமல்படுத்த வேண்டும். 10 நாள்களில் அமல்படுத்தவில்லை என்றால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்.

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாத மாவட்ட கலெக்டர்கள் உள்பட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்க முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்

மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து உரிய நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாததால், அதிகாரிகளுக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.