மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு- மந்திரிசபை ஒப்புதல்
1 min read4 percent dearness hike for central government employees-
Cabinet approval
28.9.2022
மத்திய ஆரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
மந்திரிசபை கூட்டம்
மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை ஆகிய மூன்று முக்கிய ரெயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான இந்திய ரெயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இலவச ரேஷன் அரசி திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.