May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

இலவச ரேஷன் அரிசி திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
மத்திய அரசு அறிவிப்பு

1 min read

Extension of free ration rice scheme for another 3 months

28.9.2022
மத்திய அரசு சார்பில் ரேஷன் கடையில் இலவச அரிசி வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இலவச அரிசி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் இறுதியில் நாடு முழுவதும்ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில்பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப் பட்டன.

அதாவது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதந்தோறும் தலா 5 கிலோ அரிசி அல்லது தலா 5 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. அவ்வப்போது இலவச ரேஷன் அரிசி திட்டம் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் மார்ச் மாதத்துடன் திட்டம் நிறைவடைய இருந்தது.

இலவச அரிசி வழங்கும் இந்த திட்டத்தை அவ்வப்போது நீட்டித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வரை இந்த திட்டத்துக்காக இதுவரை ரூ.2.60 லட்சம் கோடி செலவிட்டு உள்ளது.

3 மாதம் நீட்டிப்பு

இந்த திட்டம் நாளையுடன் (30ஆம் தேதி) உடன் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 5 கிலோ புழுங்கல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.