பணக்காரனாக வாழ ஆசைப்பட்டு சிறுவனை நரபலி கொடுத்த வாலிபர்கள்
1 min readTeenagers in Delhi sacrificed a boy to live a rich life
3.10.2022
பணக்காரனாக வாழ ஆசைப்பட்டு சிறுவனை நரபலி கொடுத்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நரபலி
… சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் அதே பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் பீகாரைச் சேர்ந்த அமீர்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய இளைஞர்கள் கொலை செய்துள்ளது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்யதனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் பணக்காரனாக வாழ கடவுள் சிறுவனை பலி கொடுக்க கூறியதாகவும் அதனால் சிறுவனை கொன்றதாகவும் கூறியுள்ளனர்.