May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கோவை கார் வெடிப்பு சம்பவம் – என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரி நியமனம்

1 min read

Coimbatore car blast incident – N.I.A. Appointment of Inquiry Officer

28.10.2022
கோவை கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை கார் வெடிப்பு

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இவ்வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2-வது நாளா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை கார் வெடிப்பு வழக்கை பதிவு செய்து என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.