May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியா, தமிழக அளவில் கொரோனா நிலவரம்

1 min read

Corona situation in India, Tamil Nadu

28.10.2022
இந்தியா, தமிழக அளவில கொரோனா நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக 2,208 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2,208- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 49ஆயிரத்து 088 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,619- ஆக உள்ளது.
அதேபோல், கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 691- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 398 ஆக உள்ளது.

12 பேர் சாவு

கொரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,28,999 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 219.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தமிழகத்தில்

தமிழகத்தில் சுமார் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று பாதிப்பு 166 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று புதிதாக 92 ஆண்கள், 74 பெண்கள் உள்பட மொத்தம் 166 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 42 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் 216 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 2 ஆயிரத்து 114 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.