இந்தியா, தமிழக அளிவில் கொரோனா நிலவரம்
1 min readCorona situation in Tamilnadu, India
29.10.2022
இந்தியாவில் ஒரு நாளில் 1,574 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று 62 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா அளவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,574 – பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,161 ஆக உள்ளது. அதேபோல், கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 2 ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 802 ஆக உள்ளது.
9 பேர் சாவு
கொரோனா பாதிப்பால் 9 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,29,008 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 219.62 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தமிழக அளவில்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று கொரோனா பாதிப்பு 162 ஆக குறைந்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று கொரோனா பாதிப்பு 162 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
தமிழகத்தில் இன்று புதிதாக 95 ஆண்கள், 67 பெண்கள் உள்பட மொத்தம் 162 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 41 பேர், செங்கல்பட்டில் 13 பேர் உள்பட 30 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 226 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 1,898 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.