குற்றாலத்தில் பிச்சை எடுத்த சிறுவன் மீட்பு
1 min readRescue of the boy who begged in the court
2.1.2023
குற்றாலத்தில் பிச்சை எடுத்த சிறுவன் மீட்கப்பட்டு திருநெல்வேலி மாவட்ட குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டான்.
சிறுவன்
தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி, பழைய தபால் நிலையம் பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் மதுரையை சார்ந்த சிறுவன் ஒருவன் பிச்சை கேட்ட பொழுது அக்கடையின் உரிமையாளர் ஒருவர் அக்குழந்தையை அங்கிருந்து விரட்டிய காட்சி சமூக வலைதளங்களில் பரவிவந்தது.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் மூலம் அச்சிறுவனை விரட்டிய கடையின் உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டு, மறுவாழ்வுக்காக தென்காசி மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் மூலம் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேற்கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்தார்.