ராணிப்பேட்டையில் நண்பர்கள் 2 பேர் கொலை-லாரிடிரைவர் கைது .
1 min read2 friends killed in Ranipet – Lorry driver arrested.
2.1.2023
ராணிப்பேட்டை அருகே வாலிபர்கள் இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கொலை
ராணிப்பேட்டை அடுத்த வீ.சி.மோட்டூர்
பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த
குழந்தைவேல்(வயது 33), லோடு ஆட்டோ ஓட்டிவந்த அவருக்கு பிரேமா என்ற மனைவி, ரித்திகா (2) என்ற மகள்
உள்ளனர்.
அதேபகுதியைச்சேர்ந்தவர் குழந்தைவேலின் நண்பர் சரவணன்(35) எலக்ட்ரீசியன். இவரது மனைவி ரேகா. இவர்களுக்க 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கொலை
இந்நிலையில் குழந்தை வேல், சரவணன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அங்குள்ள லாரி மெக்கானிக் ஷெட் அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவரும் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டனா. இதில்
குழந்தைவேல் இறந்துவிட்டார். சரவணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.
இதனை கண்ட அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தினர் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணனைமீட்டு சிகிச்சைக்கும் குழந்தைவேலின் சடலத்தைகைப்பற்றி வாலாஜா அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார்மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிகிச்சைபலனின்றி சரவணனும் பரிதாபமாக உயிரிழந்தார் .
அதற்குள் குழத்தைவேல்,சரவணன் இருவரும் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
லாரி டிரைவர் கைது
மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் முதற்கட்டமாக அருகிலுள்ள சிசிடிவிபதிவுகளை ஆய்வுசெய்ததில் சம்பவஇடத்தில் சந்தேகத்தின் பேரில் இருந்த சரக்கு லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர் .
விசாரணையில் லாரிடிரைவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியடுத்த டீ – புதூரைச்சேர்ந்த நிர்மல் என்பதும் லாரியை பழுது பார்க்க கொண்டு வந்து நிறுத்தியதாகவும் அப்போது கொலையுண்ட நபர்கள் இருவரும் தகராறு செய்ததாகவும் நிர்மல் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தியதாக தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவுசெய்து நிர்மலிடம் தீவிர விசாரணையைமேற்கொண்டு வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று ஒரே நேரத்தில் இருவரை கத்தியால் குத்தி கொலைசெய்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது