June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

துவாரகாபதி கடற்கரை பகுதியில் ஆமைக் குஞ்சுகளை கடலில் சேர்க்கும் பணி

1 min read

Sea turtle hatchling operation at Dwarkapati beach area

5.4.2023-
கன்னியாகுமரி மாவட்டம் துவாரகாபதி கடற்கரை பகுதியில் ஆமைக் குஞ்சுகளை கடலில் சேர்க்கும் பணி
கன்னியாகுமரி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
மாவட்ட வன அலுவலர் இளையராஜா முன்னிலை வகித்தார்.
ஆட்சியர் இதுபற்றி கூறும்போது, “கடந்த வருடம் 5993 ஆமை முட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டதில் 3708 ஆமை குஞ்சுகள் பொரித்து கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. இந்த வருடம் 9491 ஆமை முட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டதில் தற்போது வரை 1673
ஆமை குஞ்சுகள் பொரித்து கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது.” என்றார்.

முன்னதாக, வனத்துறையினரால் வெளியிடப்பட்ட கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ, மாணவியர்களுக்கு
வழங்கியதோடு, வனத்துறையினர் மற்றும் மாணவ, மாணவியர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட
ஆமை மணற்சிற்பத்தினை பார்வையிட்டார்கள்.
அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவியர்களும் கடற்கரையில் நெகிழி மற்றும் குப்பைகளை அகற்றும்
பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) .குணால் யாதவ், உதவி ஆட்சியர்

(பயிற்சி) சுகாஷ் காடே, (கேரள மாநிலம்) வனச்சரகர்கள், மாணவ, மாணவியர்கள்,ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *