திருவண்ணாமலை அருகே குடும்ப தகராறில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று நர்ஸ் தற்கொலை
1 min readIn a family dispute near Tiruvannamalai Nurse commits suicide by throwing child into well
10.4.2023
கீழ்பென்னாத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார். தாய், ஒரு குழந்தை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தையை தீயணைப்புதுறையினர் தேடி வருகின்றனர்.
நர்ஸ்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத் தூர் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு. கனலாபாடி கிராம ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சூர்யா (வயது 32). இவர் சோமசிபாடி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ். இவர்களது மகன்கள் லட்சன் (4), உதயன்(1).
இந்நிலையில் சின்ன ராசுக்கும், சூர்யாவுக்கும் இடையே கடந்த சிலமாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் ஞாயிறு இரவு மீண்டும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து சின்னராசு இரவு 10 மணியளவில் தங்களது உறவினர் ஒருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்றுவிட்டாராம்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் நள்ளிரவு சின்னராசு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி மற்றும் 2 மகன்களையும் காணவில்லை. அக்கம்பக்கம், உறவினர் வீடுகள் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உடல்கள்
அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே சூர்யாவின் சொல்போன் கிடந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சின்னராசு, கீழ்பென்னாத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர்.
சுமார் 3மணி நேரம் தேடலுக்கு பிறகு சூர்யாவும், உதயனும் சடலமாக மீட்கப்பட்டனர். மற்றொரு குழந்தை லட்சனை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே காவல்துறையினர் சூர்யா, உதயன் ஆகியோரது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.