June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 மாதம் வரை தடை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 min read

Ban on arrest of Rajendra Balaji up to 6 months-Supreme Court order

13.4.2023
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 மாதம் வரை தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ஜாமீன் நிபந்தனைகளை முழுமையாக தளர்த்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் விசாரணை நடந்தபோது, தமிழக அரசு சார்பில் இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து வருவதாகவும், எனவே அந்த விசாரணை முடிய 6 மாதம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தடை நீடிப்பு

இதையடுத்து இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 6 மாதம் வரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்கான தடையை நீட்டிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவை பெறும்படியும் உத்தரவிடப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *