ஆந்திராவில் செம்மரம் கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த 13 பேரை கைது
1 min readSheep smuggling in Andhra Pradesh: 13 people from Tamil Nadu arrested
2.5.2023
ஆந்திராவில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்யப்பட்டனர்.
செம்மரம் கடத்தல்
ஆந்திராவின் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்துவதாக சித்தூர் மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையின்போது 2 கார்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அதில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தப்பட்ட 8 செம்மர கட்டைகள் மற்றும் கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் சித்தூர்- கடப்பா நெடுஞ்சாலையில் நடந்த வாகன சோதனையின்போது, 2 கார்களில் இருந்த 4 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. செம்மரக் கட்டைகள் கடத்தி வந்ததாக, வேலூர் மாவ்டடத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செம்மரக்கட்டைகள கடத்தியது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது.