பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் தற்கொலை
1 min read
A young woman committed suicide near Pavoorchatram
3.6.2023
பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப பிரச்சினை
பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்துவீரன். இவரது மனைவி ஷில்பா (வயது 23). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷில்பா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று ஷில்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.