June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பாபநாசம் பானதீர்த்த அருவி பார்வையிட அனுமதி

1 min read

Allow to visit Babanasam Panathirtha Falls

19.9.2023

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம்
காரையார் அணைக்கு மேலே உள்ள பாணதீர்த்தம் அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர்.

அம்பாசமுத்திரம்
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் அணைக்கு மேல் பாணதீர்த்தம் அருவி உள்ளது. இதற்கு முன்னர் இந்த அருவிக்கு காரையார் அணை வழியாக தனியார் படகு சவாரி மூலம் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டு, சுற்றுலா பயணிகள் அருவியில் நீராடி வந்தனர். மேலும் இந்த அருவியில் நீராடி தீர்த்தம் எடுத்துச்செல்வதும் வழக்கமாக இருந்தது. ஆனால் வனச்சட்டம், வனத்துறையின் நெருக்கடி உள்பட பல்வேறு காரணங்களால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து படகுகளும் அணையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று முதல் பாணதீர்த்த அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறை அனுமதி வழங்கியுள்ளனர். இதற்காக வனத்துறையினர் நபர் ஒருவருக்கு ரூ.500 நூழைவு கட்டணமாக பெற்று சுற்றுலா பயணிகளை பிரத்யேக வாகனம் மூலமாக அழைத்து சென்று பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதன்படி நேற்று காலை முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் இருந்து அருவியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய வாகனத்தை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கொடியசைத்து, இனிப்புகள் வழங்கி தொடங்கி வைத்தார்.
வனத்துறையினர் சார்பாக ஏற்படுத்திய வாகன மூலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது . சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர் ஆனால் நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.