பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 20 ம் ஆண்டு விழா
1 min read
20th anniversary of Potikai Express train
21.9.2023
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் செங்கோட்டை வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.எம்.ரஹீம் தலைமையில் கேக் வெட்டி பயணிகளுக்கும் ரயில் ஓட்டுநருக்கும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி முதன்முதலாக சென்னையில் இருந்து தென்காசி வரை இயங்க தொடங்கியது. பின்னர் கடந்த 07.02.2008 அன்று முதல் செங்கோட்டை வரை நீடிக்கப்பட்டது. அதன் பிறகு செங்கோட்டை சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. முதலில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் இந்த ரயில் வெற்றிகரமாக லாபம் ஈட்டுமா என்ற சந்தேகம் அடைந்தனர்.
ஆனால் அவர்களின் எண்ணத்திற்கு மாறாக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வயவேற்பை பெற்றதோடு ரயில் நிர்வாகத்திற்கு அதிக அளவிலான லாபத்தை ஈட்டி வருகிறது இந்த ரயில் மூலம் செங்கோட்டை முதல் திருத்தங்கல் வரையிலான ரயில் பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று செப்டம்பர் 20ஆம் தேதியை முன்னிட்டு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு செங்கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து செங்கோட்டை வர்த்தக சங்கம் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் இருபதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு செங்கோட்டை வர்த்தக சங்கத் தலைவர் எஸ் எம் ரஹீம் தலைமை தாங்கி கேக் வெட்டி பயணிகளுக்கும் ரயில் ஓட்டுனருக்கும் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ரயில் பயணிகள் நல சங்கத் தலைவர் முரளி, செயலாளர் கிருஷ்ணன், வர்த்தக சங்க செயலாளர் சதீஷ், கல்யாணி, பாலு, வழக்கறிஞர் அபு, பால்ராஜ், செங்கோட்டை நகர துணை தலைவர் நவநீதகிருஷ்ணன், கணேசன், திலகர், சுப்பிரமணியன், ஜெகன், உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.