June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்- ஆட்சியர் தகவல்

1 min read

Special Private Sector Employment Camp in Tenkasi- District Collector information

5/12/2023

தென்காசி மாவட்டத்தில் இசிஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 9.12.2023 அன்று சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைதேடும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 09.12.2023 அன்று காலை 9.00 மணி முதல் 300 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் முதநிலை பட்டதாரி வரை (BE, Diploma Nursing ITI) படித்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்தமுகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் wwwinprivatejobstngov.in என்ற தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளவும். மேலும் இம்முகாம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய TENKASI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel இணையவும் உங்கள் அலைபேசியில் Telegram செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு TENKASI EMPLOYMENT OFFICE என search செய்தால் எங்கள் அலுவலக Channel தோன்றும் அதன் உள் நுழைந்து Join என்பதனை click செய்து எளிதில் Channelob Bomb.

மேலும் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார்

நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் பதிவுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு இரத்துசெய்யப்படமாட்டாது. தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைதேடும் இளைஞர்கள் இந்தவேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.