சிவகிரி அருகே காட்டு யானைகள் அட்டகாசம் விவசாயிகள் கவலை
1 min read
Farmers worried about wild elephants near Sivagiri
12.12.2023
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் உள்ள நெல் வயலில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை, சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரிய ஆவுடையாப்பேரி குளம். சிவகிரி பாகம் 2 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இக்குளத்து புரவில் நெல்சாகுபடி செய்துள்ளனர். மேலும் கரும்பும் பயிரிட்டுள்ளனர்.
கடந்த 1ம் தேதி காட்டு யானைகள் வயல் பகுதிகளுக்குள் புகுந்து நெற்பயிர்கள் மற்றும் கரும்பு தோட்டத்தை நாசம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு காட்டு யானைகள் வயல் பகுதிகளுக்குள் புகுந்து அங்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்த மேற்பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் நாசமானது.
இதுகுறித்து வனத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காட்டுயானைகள் வயல் பகுதிக்குள் அடிக்கடி புகுந்து
புகுந்து நெற்பயிர்களை ஏற்படுத்தி வருவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை வனத்துறையினர் துரிதமாக எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி சேதமான நெல் பயிர்கள் மற்றும் கரும்புகளுக்கு உரிய நிவாரண நிதி உதவியை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.