தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்க கூட்டம்.
1 min readTenkasi District People’s Welfare Workers Association Meeting.
18.12.2023
தென்காசி மாவட்ட மக்கள் மக்கள் நல பணியாளர் சங்க கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட சங்க தலைவர் வாசுதேவநல்லூர் ச.முருகன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர் தென்காசி முத்துசாமி, மாவட்ட பொருளாளர் கீழப்பாவூர் அருணாசலம், மாவட்ட துணைத்தலைவர்கள் குருவிகுளம்
ஆர்.தர்மராஜ், மேலநீலிதநல்லூர் பி.லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்
வே.புதியவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் வீரசிகாமணி ஊராட்சி மக்கள் நல பணியாளர் மகாலிங்கம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
வரும் 21 12 2023 வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கம் சார்பில தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மக்கள் நலப் பணியாளர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மேலும் வரும் ஜனவரி 3 ஆம் தேதி சென்னை யில் நடைபெறும் கோரிக்கை விளக்கப் பேரணி மற்றும் காத்திருப்பு போராட்டத்திற்கு தென்காசி மாவட்டத்திலிருந்து அனைத்து ஆண் பெண் மக்கள் நல பணியாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப் பட்டது.
இந்த கூட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள்
செங்கோட்டை பண்டாரசிவன், சங்கரன் கோவில் மாரியப்பன்,
குருவிகுளம் ருக்மணி, சங்கரன் கோவில் சண்முகச்சாமி, வாசுதேவ நல்லூர் பாலசுப்பிரமணி யன், மேலநீலித நல்லூர் கோபாலகிருஷ்ணன், காசிப் பாண்டியன், வாசுதேவநல்லூர் குமார், ஆலங்குளம் விஜயராம், கீழப்பாவூர் கருணாகரன், எல். சுப்பிரமணியன், அப்பாத்துரை, குருவிகுளம் மாரிச்சாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் சங்கரன்கோவில் ஒன்றியத் தலைவர் மாரியப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்.