June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனா காலத்தில் எடியூரப்பா ரூ. 40 ஆயிரம் கோடி ஊழல்: பா.ஜனதா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

1 min read

Yeddyurappa during the Corona period Rs. 40 thousand crore corruption: BJP MLA. Accusation

எடியூரப்பா 40 கோடி ரூபாய் ஊழல் மோசடியில் ஈடுபட்டார் என பா.ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. பகனாகவுடா பாட்டீல் யாத்னால் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
விஜயபுரா தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இது தொடர்பாக விசாரணை தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, கொரோனா காலத்தில் எத்தனை கோடி ரூபாய் ஊழல் நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா?. கொரோனா தலைவிரித்தாடிய காலத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றது.

விஜயபுரா தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இது தொடர்பாக விசாரணை தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

விஜயபுரா தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இது தொடர்பாக விசாரணை தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, கொரோனா காலத்தில் எத்தனை கோடி ரூபாய் ஊழல் நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா?. கொரோனா தலைவிரித்தாடிய காலத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றது.
பா.ஜனதா அரசு மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டது. இந்த குற்றச்சாட்டை நான் தெரிவிப்பதால் அவர்கள் நோட்டீஸ் அனுப்பி, என்னை கட்சியில் இருந்து நீக்க முயற்சித்தால், அவர்களின் மோசடியை வெளிப்படுத்துவேன்.

ஒவ்வொரு முகக்கவசம் (Mask) 45 ரூபாய்தான். ஆனால், எடியூரப்பா அரசு 485 ரூபாய் என கணக்கு எழுதியது. பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 10 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்ததாக கூறினார்கள். அவைகள் அனைத்தும் வாடகைக்கு எடுக்கப்பட்டது.

ஆனால் அவற்றை விலை கொடுத்து வாங்கினால் ஒரு நாள் வாடகைக்கான தொகையில் இரண்டு படுக்கைகள் (Beds) வாங்கியிருக்கலாம். ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வாடகையாக செலுத்தினார்கள். அதற்கு இரண்டு நல்ல படுக்கைகளை வாங்கியிருக்கலாம். கொரோனா காலத்தில் ஒரு நாளைக்கு அவர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் தெரியுமா?.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சொந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே எடியூரப்பா மற்றும் கட்சி மீது ஊழல் மோசடி குறித்து வெளிப்படையாக குற்றம்சாட்டிய விவகாரம் கர்நாடக அரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா, எம்.எல்.ஏ. பசனாகவுடா பாட்டீல் யாட்னால் அறிக்கை கொரோனா காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் மோசடிக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்துதல் பெயரில் எடியூரப்பா அரசு 4 ஆயிரம் கோடி அளவில் ஊழல் செய்ததாக காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆவணங்களுடன் குற்றம்சாட்டியதாகவும் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *