அதிகனமழை பெய்யும் என சொன்னார்கள்.. எவ்வளவு என்று சொல்லவில்லையே- மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min readThey said it will rain a lot.. They didn’t say how much – M.K.Stal’s speech
1.1.2024
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டர்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவை பாராட்டி பேசினார். அப்போது, மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
வானிலை மைய அதிகாரிகள் அதிகனமழை பெய்யும் என சொன்னார்களே தவிர, எவ்வளவு மழை பெய்யும் என சொல்லவில்லை. 100 ஆண்டுகள் இல்லாத மழை பெய்தது என்கிறார்கள். ஆனால், அவ்வளவு மழை பெய்ததற்கான காரணத்தை யாரும் சொல்லவில்லை. ஏரி உடைந்ததைப் போல், வானம் உடைந்து கொட்டியது போல மழை பெய்துள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள காலநிலை மாற்ற நிர்வாகக் குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.