சிவகிரியில் மான் கொம்புகளை கடத்திய 2 பேர் கைது – ரூ.1 லட்சம் அபராதம்
1 min read2 arrested for smuggling deer horns in Sivagiri – Rs 1 lakh fined
12-.1.2024
தென்காசி மாவட்டம்
சிவகிரியில் மானை கொன்று அதன் கொம்புகளை காரில் நடத்திய இருவரை கைது செய்து அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் காந்தாரியம்மன் கோவில் அருகே ரோந்து சென்ற போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றினை சோதனை செய்தனர். காரில் இரண்டு நபர்கள் இருந்தனர் மேலும் அந்த காரில் மூன்று மான் கொம்புகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மான் கொம்புகள் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் டாக்டர் முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலறிந்த வனச்சரக அலுவலர் மௌனிகா, வடக்கு பிரிவு வனவர் அசோக்குமார் , மற்றும் வனக்காப்பாளர்கள் சன்னாசி,முகமதுஅலி, கண்ணன் பாரதி, கண்ணன், பெருமாள், அருண் மொழி பிரதீப் வனக்காவலர் கள்,ஆனந்தன், மாரியப்பன் வேட்டை தடுப்பு காவலர்கள் பாலசுப்பிரமணியன்,சரவணன், யோகநாதன், ஆகியோர் காரில் இருந்த இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் பெத்திராஜ் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 24) களஞ்சியம் தெருவை சேர்ந்த பொன்ராஜ் என்பவரது மகன் தியாகு (வயது 24) ஆகிய இரண்டு நபர்களும் கடந்த 1ம்தேதி உள்ளாறு கிராமத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புள்ளி மானை வேட்டையாடி மான் கொம்புகளை காரில் கடத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகிரி வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் டாக்டர் முருகன் உத்தரவின் பேரில் மான் கொம்புகளை கடத்திச் சென்ற கிருஷ்ண குமார், தியாகு ஆகிய இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.