அடைக்கலபட்டணத்தில் கலை சங்கம் நிகழ்ச்சி
1 min read
Kalai Sangam program at Adhikalapatnam
18.2.2024
தென்காசி தெற்கு மாவட்டம் அடைக்கலபட்டணத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றம் சார்பில் கலைச் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்டம் அடைக்கலபட்டணத்தில்
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றம் சார்பில் நடைபெற்ற கலைச் சங்கம் நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற வேல்சாமி அவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சிவன்பான்டியன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜன், ரமேஷ், பொன் அறிவழகன், தங்கச்சாமி, சுரண்டை கணேசன், இளைஞரணி ரஹீம், சாம்பவர் வடகரை கோ.மாறன் தொழிலாளர் அணி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.