செங்கோட்டை அரசு பணிமனையில் பஸ் மோதி கண்டக்டர் பரிதாப பலி
1 min read
Conductor tragically killed after bus collided with Red Fort government office
9.4.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக மணிமனையில் பிரேக் பிடிக்காத பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் சிக்கிய இரண்டு கண்டக்டர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கோட்டைஅரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து மதுரை சென்னை பெங்களூர் உள்ளிட்ட பலவேறு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை குருசாமி தெருவை சேர்ந்த கோமதிநாயகம் (வயது 50) சொக் கம்பட்டியை சேர்ந்த ஆறுமுகச்சாமி (வயது 29) இருவரும் சென்னை மற்றும் ஊட்டியில் இருந்து வந்த பேருந்தில் கண்டக்டராக இருந்தனர்.
வழக்கம் போல் நேற்று காலை டிப்போவில் வந்து பஸ்சை நிறுத்தி விட்டு டிக்கெட் பணத்தை ஒப்படைப்பதற்காக கேசியர் அறை முன்பு சேரில் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து வந்த ஒரு பேருந்தை டிரைவர் கரிவலம்வந்த நல்லூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 33) டிப்போவில் கேசியர் அறை அருகே அந்த சமயத்தில் நிறுத்தினார். அந்த பேருந்து வாசலில் இடையூறாக இருப்பதாகக் கூறி வேறு இடத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளனர், இதையடுத்து லட்சுமணன் பஸ்சில் ஏறி அந்த பஸ்ஸை இயக்கி பிரேக்கை மிதித்துள்ளார்.
பஸ்சில் பிரேக் இல்லாததால் பேருந்து அவரது கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த கண்டக்டர்கள் இருவர் மீதும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இருவரும் அமர்ந்திருந்த சேர் முன்பு கிடந்த மேஜைக்குள் சிக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் பணிமனையில் இருந்தவர்கள் மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அப்போது ஆறுமுச்சாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் படுகாயமடைந்த கோமதிதாயகத்திற்கு முத லுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து செங்கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.