பிரானூர் ஊராட்சி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல்
1 min readPublic road blockade in Branur panchayat area
21/4/2024
தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரானூர் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் சரியாக கூறி செய்யவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரானூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சரிவர செய்யாமல் துணை தலைவர் வணிக நிறுவனங்கள் ஹோட்டல்களுக்கு வினியோகம் செய்து வருவதாகவும், இதனால் எங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. என்றும் இதனை கண்டித்து சில நாட்களுக்கு முன் ஊர் பொதுமக்கள் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் வந்து சமரசம் பேசியதால் கலைந்து சென்றனர்.
தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் மனு அளித்துள்ளனர். அதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவே பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் வழங்காததை கண்டித்து நேற்று மதியம் 11.30 மணி முதல் 1 மணி வரை திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தகவலறிந்த தென்காசி காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ வருகை தந்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் குடிநீர் விநியோகம் சீராக வழங்க பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தினால் சுமார் ஒரு மணி நேரமாக திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது இதனால் இருபுறமும் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது குறிப்பிடத்தக்கது.