புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை
1 min readPolice intensive vehicle check at Puliarai check post 21/4/2024
தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்து முடிவு பெற்றுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளானது தொடர்ந்து அமலில் உள்ளது.
தென்காசி மாவட்டம் தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை காவல்துறை வாகன சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் தலைமையில் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குள் செல்லும் வாகனங்கள் முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இரு மாநில எல்லைப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் முழுமையாக நடைபெற்று முடியும் வரை இந்த சோதனையானது நடைபெறும். பணப்பட்டுவாடா உள்ளிட்ட விஷயங்களை முழுவதுமாக தடுக்கவும், எந்த விதமான அச்சுறுத்தலும் இன்றி மற்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வகையில் இந்த கண்காணிப்பு பணியானது தொடர்ந்து நடைபெறும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
One attachment