குற்றாலம் செண்பகாதேவி அம்மனுக்கு தீர்த்தவாரி
1 min readCourtalam Chenbagadevi Amman is a Tirthavari
25.4.2024
குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு மேலே மேற்கு தொடர்ச்சி மலை மேல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செண்பகாதேவி அம்மன் திருக்கோவில் சித்திரை பௌர்ணமி திருவிழா கடந்த 14ஆம் தேதி துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழா நிறைவு நாளான நேற்று செண்பகாதேவி அம்மனுக்கு செண்பகாதேவி அருவியில் தீர்த்தவாரி மற்றும் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது செண்பகாதேவி அருவியில் மஞ்சள் பொடிகள் கொட்டப்பட்டு அருவி மற்றும் தடாகம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் மாறியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது . இந்நிகழ்ச்சியில் தென்காசி குற்றாலம் செங்கோட்டை பகுதிகளைச் சார்ந்த ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்