May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில்டி ஐ ஜி ஆய்வு

1 min read

Tenkasi Constituency Vote Counting Centre DIG Study

25.4.2024
தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறைத் துணைத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ் பி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை அங்கு நான்கு அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும மையமான தென்காசி கொடிக்குறிச்சி யு.எஸ்.பி கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள அறைகளில் பாதுகாப்பாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டதோடு துப்பாக்கி ஏந்திய போலீசார் நான்கு அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் சீல்வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான தென்காசி கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனிஅறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ் குமார், மற்றும்
தென்காசி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் நான்கு முனைகளிலும் உயரமான கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அவற்றில் பைனாகுலர் உதவியுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது இவற்றை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஓர் அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் டிவி மானிட்டர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் உடனிருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.