June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

உங்களைத் தேடி உங்கள் ஊரில் 19-ந் தேதி வீரகேரளம்புதூரில் கலெக்டர் தங்கி ஆய்வு

1 min read

Look for you and stay in your town on 19th in Veerakeralambutur

14.5.2024
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் வீரகேரளம்புதூர் தாலுகா பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையின் கீழ் அனைத்து முதல் நிலை அலுவலர்களும் இரவிலும் தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் என்ற திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், எதாவது ஒரு வட்டத்தினை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் இரவிலும் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் வீரகேரளம்புதூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் 19.06.2024 காலை 9.00 மணி முதல் 20.06.2024 காலை 9.00 மணி வரை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையின் கீழ் அனைத்து முதல் நிலை அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

எனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து முதல்நிலை அலுவலர்களும் 19.06.2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் வீரகேரளம்புதூர் வட்டத்தில் அரசால் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கியமான திட்டங்கள், அரசு அலுவலகங்கள், பணிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை வீரகேரளம்புதூர் கிராமம், சேனைத்தலைவர் மண்டபத்தில் வைத்து பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தும், கோரிக்கைகள் எதும் இருப்பின் அதனை கேட்டு நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும்.

அதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்டத்தில் உள்ள முதல்நிலை அலுவலர்க ளுடன் நகர்புறம் மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு சென்று திட்டப்பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து இரவு தங்க உள்ளனர்.

பின்னர் மறுநாள் காலை (20.06.2024) காலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை வீரகேரளம்புதூர் வட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு சென்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் ஆய்வு செய்ய உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.