தோரணமலை முருகன் கோயிலில் இன்று காலை வருண கலச பூஜை
1 min readVaruna Kalasa Pooja this morning at Thoranamalai Murugan Temple
14.5.2024
தென்காசி மாவட்டம், தென்காசி – கடையம் செல்லும் பாதையில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.
தென்காசி – கடையம் செல்லும் வழியில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை, நடைபெற்றது. முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் சிறப்பாக செய்திருந்தார்.