கேன்சருக்கு விளக்கம் கேட்ட கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
Kannayairam asked for an explanation for cancer/comedy story/Tapasukumar
21.4.2025
கண்ணாயிரம் ரெயில் தண்டவாளத்தில் வெடிகுண்டுவைத்த தீவிரவாதியை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதனால் அவருக்கு பத்து லட்சம் பரிசு என்று கண்ணாயிரம் புகைப்படத்துடன் தமிழ் செய்தி தாளில் செய்தி வெளியாகி இருந்தது.
இதைப் பார்த்து லண்டனிலிருந்து செல்போனில் பேசி மிரட்டிய தீவிரவாதி,பேப்பரில் கண்ணாயிரம் படம் மற்றும் செய்தி பார்த்ததாக சொன்னான். இதை பயில்வானிடம் கண்ணாயிரம் சொல்ல, லண்டனில் தமிழ் பேப்பர் கிடையாது என்க, கண்ணாயிரத்துக்கு தலை சுற்றியது. அப்போ தீவிரவாதி லண்டனிலிருந்து பேசினதாக போலீசார் சொன்னது பொய்யா.. லண்டனிலிருந்து பேசினான் என்றால் அங்கே அரிவாள் ஏது.. துப்பாக்கிதானே உண்டு. என்னை அவன் துப்பாக்கியால்தானே சுடுவேன் என்று மிரட்டவேண்டும். அரிவாளால் வெட்டுவேன் என்றல்லவா மிரட்டினான். கழுத்துக்கு எண்ணை போட்டுக்கோ என்றல்லவா சொன்னான். அப்போ அவன் நம்ம ஊர்காரனாகத்தான் இருப்பான். இங்கே எங்கோயோ இருந்துதான் பேசி இருப்பான். எப்படியும் அருவாளோடு நம்மை தேடி வருவான் என்று நினைத்து கண்ணீர் வடித்தார்.
அதைப் பார்த்த போலீசார் ஏங்க மறுபடியும் யாரும் மிரட்டினார்களா.. ஏன் அழுறீங்க என்று கேட்க கண்ணாயிரம் போலீசாரிடம் நீங்க என்னிடம் பொய் சொல்விட்டீங்க. .தீவிரவாதி லண்டனிலிருந்து பேசினான்னு சொன்னீங்க.. அப்படின்னா அவன் லண்டனில் தமிழ் பேப்பர் எப்படி பார்த்திருக்க முடியும். அங்கேதான் தமிழ் பேப்பர் வராதே தீவிரவாதி லண்டனிலிருந்து பேசினா துப்பாக்கியால் சுடுவேன் என்றுதானே மிரட்டவேண்டும். என்னை அருவாளால் வெட்டுவேன் என்றுதானே சொன்னான். அதனால தீவிரவாதி லண்டனிலிருந்து பேசல. உள்ளூரில இருந்துதான் பேசி இருக்கிறான் என்றார்.
கண்ணாயிரம் கண்டுபிடித்துவிட்டதை அறிந்த போலீசார் அவரை சமாளிக்க முயன்றனர். கண்ணாயிரம்.. தீவிரவாதியின் நண்பர் இங்கே இருந்து வாட்ஸ்அப்பில் அவனுக்கு தமிழ் பேப்பரில் வந்த செய்தியை அனுப்பி இருக்கலாம். தீவிரவாதி லண்டனில் இருந்தாலும் அவனுக்கு சொந்த ஊர் இதுதானே
அவன் லண்டனிலிருந்து வந்தாலும் சொந்த மண்ணின் பழக்கம் மாறாது அல்லவா. அதான் அருவாளோடு வருவேன் என்று மிரட்டுகிறான். நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க.. என்று சொல்ல, கண்ணாயிரம், அப்படியா என்றார்.
அப்பாட இந்த சந்தேகம் தீர்ந்தது. அடுத்து புற்று நோயுக்கும் கடக ராசிக்கும் ஏன் கேன்சருன்னு பெயர் வச்சாங்க.. ஒரு வேளை சுடிதார் சுதா நம்மளை ஏமாத்துறாளா.. அவளிடம் ஆதாரம் கேட்போம் என்று கண்ணாயிரம் நினைத்தார்.
சுடிதார் சுதாவிடம் போய், சுடிதார் சுதா ஒரு சந்தேகம். புற்று நோயுக்கும் கடகராசிக்கும் கேன்சர் என்றே சொல்வாங்கன்னு சொன்னீயே.. அதற்கு ஆதாரம் இருக்கா என்று கேட்டார்.
உடனே சுடிதார்சுதா செல்போனில் கூகுளில் போய் கேன்சர் விவரங்களை தேடினார். பின்னர் இதோ பாருங்க
புற்று நோயுக்கும் கடகராசிக்கும் கேன்சர் என்று போட்டிருக்கு என்க, கண்ணாயிரம் உற்றுப்பார்த்தார். ஆமா. அப்படிதான் போட்டிருக்கு.. ஆனா கடக ராசின்னு போட்டு நண்டு படம்தானே போட்டிருக்கு.. நண்டுக்கு இங்கிலீசில என்ன என்று கண்ணாயிரம் கேட்க, அதுவா நண்டுன்னா இங்கிலீசில கிராப் என்று சுடிதார் சுதா சொன்னார்.
உடனே கண்ணாயிரம், அப்படின்னா நண்டுபடம் போட்டிருக்கும் கடகராசிக்கும் கிராப் என்றுதானே போட்டிருக்க வேண்டும் என்று சொன்னார்.
அதைக் கேட்ட சுடிதார்சுதா, இது நல்ல கேள்வி. நண்டுக்கு ஆங்கிலத்தில கிராப்பின்னு பெயர். ஆனா, கடகராசிக்கு லத்தீனில கேன்சர் என்று பெயர் என்று சொன்னார்.
உடனே கண்ணாயிரம், கடகராசிக்கு ஆங்கிலத்திலே பெயர் இல்லையா.. லத்தீனில்தான் கேன்சருன்னு பெயரா.. என்ன ஒரே குழப்பமா இருக்கே.. கடகராசிக்கு ஏன் நண்டு படம் ஏன் போட்டாங்க.. என்று சுடிதார்சுதாவிடம் கேட்டார்.
அதற்கு அவர், நண்டுக்கு என்ன குணம் உண்டோ.. அதே குணம் கடகராசிக்காரர்களுக்கும் உண்டு. ஒண்ணை பிடிச்சாவிடமாட்டாங்க என்றார்.
ஓ..அப்படியா.. நீ கடக ராசிதானே அதான் பிடிவாதமா இருக்க .அது சரி அப்போ கடகராசிக்கு கிராப் என்றே பெயர் வைச்சிருக்கலாம். ஏன் கேன்சருன்னு பெயர்வச்சாங்க..புரியலையே என்று கண்ணாயிரம் கேட்க, சுடிதார் சுதா மெல்ல, வானத்திலே கடக ராசிக்குரிய நட்சத்திர கூட்டங்கள் இருக்கும். அது பார்ப்பதற்கு புற்றுநோய் புள்ளிகள் மாதிரி இருக்கும். அதான் கடக ராசியை லத்தீனிலே கேன்சருன்னு சொல்லிட்டாங்க என்க, கண்ணாயிரம் அடேயப்பா கேன்சருக்கு இவ்வளவு விளக்கமா .இது தெரியாம அந்த தீவிரவாதி சேகர்பய உனக்கு கேன்சருன்னு சொல்லிட்டான்.. உனக்கு உண்மையிலே கேன்சர் இல்லையே என்க, சுடிதார் சுதா இல்லை என்று தலையை ஆட்டினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.