எல்லையில் 7-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு
1 min read
Pakistan Army violates ceasefire along border for 7th day
1.5.2025
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான்- இந்தியா இடையே பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் களம் இறங்கி உள்ளனர். சந்தேக நபர்கள், இடங்களில் பாதுகாப்பு பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக அத்துமீறி வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுத்தாலும் திருந்தியபாடில்லை. இந்த நிலையில், 7-வது நாளாக நேற்று இரவும் ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
==
அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு
புதுடெல்லி,மே.2-
அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய நிதி அமைச்சகம் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகையான அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்துள்ளது. இந்த ஏற்றுமதி வரி நேற்று முதல் (மே 1-ம் தேதி) அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி இந்தியாவில் உள்ள மக்களுக்கு தேவையான அளவு அரிசி இருப்பதும், விநியோகமும் தொடர்ச்சியாக இருப்பதையும் உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வரி உடனடியாக அமலுக்கு வருவதாகவும், வரி விதிப்பின் மூலம் உள்நாட்டு சந்தையில் விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், 2022 செப்டம்பர் முதல் நடைமுறையில் இருந்த அரிசி ஏற்றுமதிக்கான அனைத்து தடைகளையும் மத்திய அரசு நீக்கியது, அதே நேரத்தில் உடைந்த அரிசி ஏற்றுமதி மீதான தடையையும் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது. புழுங்கல் அரிசி மீதான சுங்க வரியை 10 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைத்த சில மணி நேரங்களுக்குள், வெள்ளை அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) ரத்து செய்தது. உயர் மட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து இது முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.