June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

ஐதராபாத்தில் தயாராகிறது ரபேல் போர் விமான பாகங்கள்

1 min read

Rafale fighter jet parts being manufactured in Hyderabad

6.6.2025
ரபேல் போர் விமானத்தின் உடற்பகுதி இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியஸ்னுடன், டாடா அட்வான்ஸ் சிஸ்டத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதற்காக டாடா நிறுவனம் ஐதராபாத்தில் ஒரு அதிநவீன தொழிற்சாலையை தொடங்க உள்ளது.

ரபேல் போர் விமானத்தில் உடற்பகுதியான பக்கவாட்டு ஓடுகள் பின்புறப்பகுதி மத்திய உடற்பகுதி மற்றும் முன்பகுதியை தயாரிக்க உள்ளது.

இந்த தொழிற்சாலை மாதத்திற்கு 2 உடற்பகுதிகள் தயார் செய்யும் திறனை கொண்டதாக இருக்கும். உற்பத்தி தொடங்கி வருகிற 2028-ம் ஆண்டு விமானத்திற்கான பாகங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரெஞ்சு நாட்டிற்கு வெளியே ரபேல் போர் விமான பாகங்கள் ஐதராபாத்தில் முதல் முறையாக தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *